ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா நேற்று முன்தினம் பதிலடி கொடுத்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா திட்டமிட்ட துல்லிய தாக்குதலை நடத்தியது. இந்த 25 நிமிட தாக்குதலில், தீவிரவாத முகாம்களை குறிவைத்து 24 குண்டுகள் வீசப்பட்டன. இதில், லஷ்கர்-இ-தொய்பா முகாம்கள், ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.இந்த சூழலில், இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்துமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார்.இந்த சூழ்நிலையில் பஞ்சாபில் உள்ள பொற்கோவில் வரலாற்றில் முதல் முறையாக பாதுகாப்பிற்க்காக மின் தடை ஏற்பட்டது <br /><br />#goldentemple #punjab #blockout #Pahalgam #Pahalgamattack #INDVSPAK #pakistan #pakistannews #pakistani #india<br /><br /><br /><br /><br /><br /><br />For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com<br /><br />Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g<br />Website: https://tamil.asianetnews.com/<br />Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL<br />Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==<br />X (Twitter): https://x.com/AsianetNewsTM<br />Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D